பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 6 - 1857 க்கு பின் ஆதிக்கம் தேடுதல்கள்
1857 ஆம் ஆண்டில் கான்பூர் படுகொலை போன்ற பல வன்முறையான கலவரங்கள் நடந்தன. நவீன தொழில்நுட்பங்களை கொண்ட கம்பெனி படைகள் அனைத்து கலவரங்களையும் அடக்கியது. 1858 ல் இங்கிலாந்தின் அரசே நேரடியாக இந்திய மாகாணங்களை ஆள தொடங்கியதிலிருந்து போராட்டங்களும் புரட்சிகளும் ஓரளவு ஓய்ந்தன. அதனால் பிராமணர்களும் வேறு எதாவது புது வழியில் ஆதாயம் தேட தொடங்கினார்கள். இதில் இரண்டு விதமாக பார்ப்பனர்கள் உயர் இடங்களை எட்டினார்கள். முதல் வழி - இந்திய சமூக சேவை (indian civil services, ICS) ஆங்கிலேயர்களுக்கு மட்டும் தகுதி இருந்த நிலையில் பார்ப்பனர்கள் மட்டும் இந்த தேர்வை எழுத தகுதி கேட்டு பெற்றனர் (சமசுகிருதம் போல் ஆங்கிலம் கற்கவும் பார்ப்பனர்களுக்கு மட்டும் தகுதி இருந்தது). இத்தேர்வில் வெற்றி பெற்ற பல பார்ப்பனர்கள் அதிகாரத்தை அப்பாவி மக்கள் மேல் காண்பிப்பதையும் மற்ற மத மக்களையும், தாழ்ந்த சாதி மக்களையும் ஒடுக்குவதையே வாடிக்கையாக வைத்து கொண்டார்கள். இவர்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ICS அதிகாரத்தில் தொடர்ந்தனர். இங்கிலாந்தில் அதிகாரிகள் வீட்டில் முழு நேர வேலைக்காரர்கள் வைத்து கொள்வது 1800க்கு முன்னாலே தடை ஆனது. ஆ...